தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம் தான்..!

68பார்த்தது
தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம் தான்..!
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. நிதானமாக செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். பொறுமையில்லாதவனிடம் அது இராது. தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.

தொடர்புடைய செய்தி