தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு

55பார்த்தது
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு
நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது என சட்டப்பேரவையில் பென்னாகரம் பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி அறிவித்தார். மேலும் அவர், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் தீர்மானம். நுழைவுத் தேர்வுகள் நுழையாமல் இருக்க இந்த தீர்மானம் உதவும். 12-ம் வகுப்பு மதிப்பெண்ணே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு போதுமானது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி