நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்கட்சியால் முடக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களில் நீட் வினாத்தாள் குறித்து விவாதம் நடத்த கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.