குடும்ப சண்டையை சமாதானம் செய்ய வந்த உறவினர் மீது தாக்குதல்

83பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கும், மலர் என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடிப்பழக்கத்திற்கு ஆளான கஜேந்திரனுடன் சண்டை ஏற்பட்டதால் மலர் அண்மையில் தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு நேற்று (செப். 09) வந்த கஜேந்திரனுக்கு மலர் சகோதரருடன் சண்டை ஏற்பட்ட நிலையில் அதை தடுக்க வந்த உறவினர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி