கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டில் 2,21,434 புறநோயாளிகள், 63.505 உள்நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை 2,179 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது" என கூறியுள்ளார்.