ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ஜூலை 20-ம் தேதி நினைவேந்தல் பேரணி

56பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ஜூலை 20-ம் தேதி நினைவேந்தல் பேரணி
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி ஜூலை 20-ம் தேதி நினைவேந்தல் பேரணி நடத்தப்படும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "பிஎஸ்பி மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள். ஜெய் பீம்!" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி