பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அக்கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.