இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் - பிரான்ஸ் அதிபர்

63பார்த்தது
இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் - பிரான்ஸ் அதிபர்
இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் சிக்கி காசாவில் இதுவரை 41,825 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், "லெபனான் ஒரு புதிய காசாவாக மாறக் கூடாது. லெபனான் மக்களையும் பலி கொடுக்க முடியாது. காசாவில் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும்" என அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி