பூச்சிக்கொல்லி குடித்து தாய், தந்தை, மகன் தற்கொலை

85பார்த்தது
பூச்சிக்கொல்லி குடித்து தாய், தந்தை, மகன் தற்கொலை
பெரம்பலுார் மாவட்டம் என்.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் சிவா (27). இவருக்கும் பரவாய் கிராமத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னையால் அனிதா தன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். தீபாவளி சீட்டு தொழிலில் நஷ்டம் மற்றும் மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியடைந்த சிவா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதை, தன் பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்களும் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்தனர். சிவா, அவரது தந்தை சின்னதுரை, தாய் கலா ஆகிய மூவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து அருகில் உள்ள ஓடைப்பகுதியில், நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வி.களத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி