அரியலூரில் பரபரப்பு: பச்சிளம் பெண் குழந்தை மாயம்

3602பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த மேல சம்போடை கிராமத்தைச் சேர்ந்த உத்திராபதி மகன் அன்புதுரை(21) என்பவர் 18 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பம் ஆக்கி ஏமாற்றியதாக தெரிகிறது. பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புதுரையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது அவர் ஜாமினில் வெளியில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் மார்ச் 29 -ந்தேதி அன்புதுரை கர்ப்பமாக்கிய அப்பெண்னுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே தாயுடன் குழந்தை வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் தாயுடன் படுத்து தூங்கி கொண்டிருந்த அப்பெண் குழந்தையை காணவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை கடத்தியவர்கள் யார் என்பது குறித்தும் மேலும் அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி