அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 பேர் பலி

65பார்த்தது
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரியல் பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வயதான தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேர் தீயில் உடல் கருகி பலியானார்கள். ஏசியில் ஏற்பட்ட மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: MIDDAY

தொடர்புடைய செய்தி