மகாராஷ்டிரா மாநிலத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஸ்ரீகாந்த் (23) என்ற இளைஞரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேபிள் ஒயர் பதிக்கும் பணிக்காக வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள், யானை வரும் செய்தி கேட்டு அங்கு வேடிக்கை பார்க்க சென்ற நிலையில், யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. மற்ற இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.