சென்னையில், ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரிய மனு இன்று உயநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட விளக்கத்தில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சென்னையில் , சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்கவும், பெருங்களத்தூரில் இறக்கிவிட மாட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் வரைபடத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.