விமானி பயிற்சி பள்ளி தொடங்க ஏர் இந்தியா திட்டம்!

74பார்த்தது
விமானி பயிற்சி பள்ளி தொடங்க ஏர் இந்தியா திட்டம்!
இந்தியாவில் முதல்முறையாக, விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பிரத்தியேக பயிற்சி பள்ளியை நிறுவ உள்ளது ஏர் இந்தியா நிறுவனம். மகாராஷ்டிராவின் அமராவதியில் அமைக்கப்பட உள்ள இப்பள்ளியில், ஆண்டுக்கு 180 பேருக்கு விமானி பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன் அனுபவம் இல்லாவிட்டாலும் தகுதி, ஆர்வமுள்ளவர்கள் இப்பள்ளியில் முழுநேர பயிற்சியில் சேர்ந்து விமானி ஆகலாம். இந்தியாவில் அதிகளவில் விமானி பயிற்சி மையங்கள் இல்லாததால் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி பெறும் சூழல் இருப்பதால் இந்த முன்னெடுப்பு என ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி