ஒரே ஆண்டில் 330 பேர் உயிரிழப்பு

74பார்த்தது
ஒரே ஆண்டில் 330 பேர் உயிரிழப்பு
2023ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். இதற்கு மனித தவறே காரணம் என கூறப்பட்டது. மேலும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நார்த் ஈஸ்ட் விரைவு ரயில் தடம்புரண்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 2023ல் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ராயக்கடா பயணிகள் ரயில் மீது பாலஸா பயணிகள் ரயில் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜம்தாரா ரயிலில் தீ பரவல் என பரவிய வதந்தியை நம்பி கீழே குதித்த 2 பெண்கள் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி