அதிமுக நிர்வாகி கொலை வழக்கு திமுக நிர்வாகி கைது

63பார்த்தது
அதிமுக நிர்வாகி கொலை வழக்கு திமுக நிர்வாகி கைது
கள்ளக்குறிச்சி: மணலுார்பேட்டை, முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). அதிமுக இளைஞரணி செயலாளர். அதே ஊரைச் சேர்ந்தவர் திமுக 1வது வார்டு செயலாளர் தியாகு (38). இருவரும் நண்பர்கள். தியாகுவின் மனைவி மாற்றுத்திறனாளி, கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனை கோபிநாத் தலையிட்டு பஞ்சாயத்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த 20ஆம் தேதி தியாகுவின் பாட்டி தனலட்சுமி வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற கோபிநாத், தியாகுவிற்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தியாகு, கோபிநாத்தை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கோபிநாத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து கோபிநாத்தின் தாய் கீதா (57) கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தியாகுவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி