கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெடிகுண்டு வீச்சு

82பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டில் நபர் ஒருவர் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனந்த் தாக்கூர் என்ற நபர் வாடகை வீட்டை காலி செய்த நிலையில் தனது டெபாசிட் பணத்தை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு உரிமையாளர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஆனந்த் அவர் வீட்டின் மீது வெடிகுண்டை வீசியுள்ளார். முன்னதாக அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பக்தியுடன் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்து இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி