சிமென்ட் தொழிற்சாலையில் விபத்து - 20 பேர் படுகாயம்

77பார்த்தது
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் இயங்கி வரும் அல்ட்ராடெக் சிமென்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 20 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி