தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூரில் தேர்தலன்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் திமுகவினரை தொடர்புபடுத்தி அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன் என்பவர் அளித்த புகாரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.