மின்சாரம் தாக்கியதால் பறிபோன உயிர்

69பார்த்தது
மின்சாரம் தாக்கியதால் பறிபோன உயிர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் (19) கல்லூரி மாணவர் ஆவார். இன்று அப்பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும் நிலையில் பேனர் வைக்க அதன் கம்பியை அவர் தூக்கி செல்லும்போது டிரான்ஸ்பார்மர் வயரில் கம்பி உரசி, மின்சாரம் தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கல்யாணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்ததால் குடும்பத்தார் கதறி அழுதனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி