மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்

54பார்த்தது
மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் - சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணமாகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் சுமித்ரா ஆகியோரை வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு எடுத்து வாய்த்த வீடியோவில், எங்களது சாவிற்கு காரணம் எனது மகனும் மருமகளும்தான் என கூறியுள்ளனர். நாங்கள் இறந்த பின்பு சொத்து அணைத்து எங்களது மகளுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி