கடும்வெயில் காரணமாக தீப்பிடித்து எரிந்த பைக்

71பார்த்தது
கடும்வெயில் காரணமாக தீப்பிடித்து எரிந்த பைக்
கடந்த சில நாட்களாக திருப்பத்தூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், கல்லூரி மாணவர் ஒருவரின் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் கல்லூரியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்த போது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கடும் வெயில் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி