அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனமான போயிங் மீண்டும் சர்ச்சையில் இடம்பிடித்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஓரிகானுக்கு வெளிப்புற பேனல் இல்லாமல் பறந்தது. அப்போது அதில் 139 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் குறித்து FAA விசாரணை நடத்தி வருகிறது.