உ.பி., மாநிலம் அம்பேத்கர் நகர் பகுதியில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. இரண்டு சகோதரர்கள் தங்கள் காரை மாற்றியமைத்தனர். மாருதி ஆல்டோ 800 காரை ஹெலிகாப்டராக மாற்றி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இவர்களின் திறமையை அப்பகுதி மக்கள் பாராட்டினர். ஆனால் இதுபற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. சகோதரர்கள் இருவரும் தயாரித்த ஹெலிகாப்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.