மாட்டிற்கு கஞ்சா இலை கொடுத்த நபர்

1079பார்த்தது
மாட்டிற்கு கஞ்சா இலை கொடுத்த நபர்
திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தனது வீட்டின் பின்புறம் சுமார் 7 அடி நீளமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். மேலும் அந்த கஞ்சா செடியில் இருந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக இலையை பறித்து மாட்டிற்கு உணவாக கொடுத்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டிற்கு வந்த போலீசார் கஞ்சா செடியை காவல் நிலையத்திற்கு பிடுங்கி சென்றனர். பின்னர் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி