மரத்தில் மோதிய அரசுப் பேருந்து.. 30 பேர் காயம்

84பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கோட்டைப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்து, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். லேசான காயமடைந்த 25 பேர் நத்தம் அரசு மருத்துவமனையிலும், படுகாயமடைந்த 7 பேர் மதுரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி