ரூ.30 லட்சம் செலவில் தயாரான குகன் படகு

81பார்த்தது
ரூ.30 லட்சம் செலவில் தயாரான குகன் படகு
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், குகன் படகு பழுதடைந்த நிலையில் ரூ.30 லட்சம் செலவில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சீரமைத்துக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து குகன் படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது.

தொடர்புடைய செய்தி