42 வயது பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்

75668பார்த்தது
42 வயது பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்
டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனியார் நிறுவன தலைமை அதிகாரி, அவருடன் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்திய பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததாக அப்பெண் (வயது 42) தெரிவித்துள்ளார். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா, சிஇஓ-க்கு அறிமுகம் ஆனவர் என்றும் அவரின் பரிந்துரையின் பேரில் தான் இப்பெண்ணுக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி