பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

83பார்த்தது
பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை
பீகாரில் பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி தாயானந் ராய் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வயல் வெளிக்கு சென்ற இந்த இரண்டு சிறுமிகளை சிமெண்ட் கற்களால் தாக்கியதோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிகளை காணவில்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தபோது ஒரு சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பின்னர் மற்றொரு சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். மேலும் கைது செய்யப்பட்ட தாயானந் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி