15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!

76பார்த்தது
15 வயது சிறுவனால் சிறுமி 5 மாதம் கர்ப்பம்!
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண்ணிற்கு மனநலம் பாதிக்கப்பட்ட கணவரும், 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த சிறுமிக்கு சென்னை வஉசி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் 15 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அரித்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி