இன்று (ஜூன் 15) உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32 சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதை விட இன்னமும் அதிர்ச்சி தரும் தகவல், 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.