இன்று தரிசனம் செய்ய 90,000 பேருக்கு அனுமதி

72பார்த்தது
இன்று தரிசனம் செய்ய 90,000 பேருக்கு அனுமதி
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 80,000 பேர், நேரடியாக முன்பதிவு செய்த 10,000 பேர் இன்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜனவரி 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி