சிறப்பு முகாம்களில் 78,667 பேர் பயன்

83பார்த்தது
சிறப்பு முகாம்களில் 78,667 பேர் பயன்
டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் 78,667 பேர் பயனடைந்தனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மழைநீர் வடிந்த இடங்களில் 526 நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் 97 நிலையான மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி