இந்தியாவில் 2023, நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, மெட்டா நிறுவனம் சார்பில் இன்று(ஜன.1) தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மோசடிகளில் ஈடுபடும் கணக்குகளை கண்காணித்து வரும் மெட்டா நிறுவனம், 2023, நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும் 71,96,000 கணக்குகள் தடைக்கு ஆளாகி உள்ளன. இந்த கணக்குகளில் சுமார் 19,54,000 கணக்குகள் வாட்ஸ் ஆப் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையின் கீழ் தடைக்கு ஆளாகின. நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும் 8841 புகார்களை பயனர்களிடம் இருந்து பெறப்பட்டதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.