போக்சோ குற்றவாளிகள் 5 பேர் சிறையில் இருந்து எஸ்கேப்

60பார்த்தது
போக்சோ குற்றவாளிகள் 5 பேர் சிறையில் இருந்து எஸ்கேப்
அசாமில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில் இருந்து 5 விசாரணைக் கைதிகள் இன்று (அக்., 11) அதிகாலை தப்பிச் சென்றதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் ஐந்து பேரும் போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர். 20 அடி உயர சுவருடன் சேர்ந்த கைதிகள் அறையின் இரும்பு கிரில்லை உடைத்து தப்பியுள்ளனர். இவர்களை போலீசார் தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி