மீனாட்சி அம்மன் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு

778பார்த்தது
மீனாட்சி அம்மன் கோயிலில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோயிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள அம்மன் சன்னதி வழியாகச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து மதுரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாலை மார்க்கமாக பயணிக்கிறார். பின்னர் இன்று கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவிலும் கலந்துகொள்கிறார்.