கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு தமிழக வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கியாசனூா் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கா்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இன்று வரை அந்த நோய்க்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.