லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி

71பார்த்தது
லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி
தென்காசி: சுரண்டையில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூலி வேலைக்காக லோடு ஆட்டோவில் இன்று (ஆகஸ்ட் 28) காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாடியூர் அருகே ஆட்டோ வளைவில் திரும்பும் போது சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி