ஏசி-யில் ஒளிந்திருந்த 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு (Video)

71பார்த்தது
திருச்சி லால்குடியை சேர்ந்த ரோஸி தனது வீட்டின் ஏசி-யில் இருந்து வால் தொங்குவதை இன்று கவனித்தார். முதலில் அது எலி வால் என்றே நினைத்திருக்கிறார். ஆனால் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது ஏசி-யில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு இருப்பதை கண்டுபிடித்து மீட்டனர். ஜன்னல் கதவைத் திறந்து வைத்ததனால், அதன் வழியாக பாம்பு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நன்றி - Sun News

தொடர்புடைய செய்தி