சென்னையில் 7 நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

83பார்த்தது
சென்னையில் 7 நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது
மாநில தலைநகரான சென்னையில் சமீப காலமாக வழிப்பறி சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவதால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில் சென்னையில் கடந்த 7நாட்களில் 34 வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.70 லட்சம், நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவை மீட்கபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி