தமிழகம் பின்னோக்கி செல்கிறது.. இபிஎஸ்

50பார்த்தது
தமிழகம் பின்னோக்கி செல்கிறது.. இபிஎஸ்
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபொழுது, காவிரி பிரச்னையில் அதிமுக அரசு தான் நல்ல தீர்வு கண்டது. மேகதாது அணை விவகாரத்தில், திமுக அரசின் மெத்தனப்போக்கால் தான் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது உச்சநீதிமன்றத்திற்கு சென்று மேகதாது அணையை கட்டவிடாமல் தடையைப் பெற வேண்டும். திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் வாக்களித்தனர் எனவும் கூறியுள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் நலிவடைந்து விட்டது. திமுக ஆட்சியில் விலைவாசி 40% உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அதிக கடன் வாங்கியதால், வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி