நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் காட்சிகள் தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக அதன் தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பின் சந்திக்கும் முதல் தேர்தலாகும். இதில் கூட்டணி என்ற பேச்சுவார்த்தையும் நீடித்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.