ரீல்ஸ் எடுத்த போது ஒரு நொடியில் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனமாடுவது போன்று ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் மின்னல் தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார். இதனை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.