நான் ஓடி ஒளிபவன் அல்ல - மு.க.ஸ்டாலின்

85பார்த்தது
நான் ஓடி ஒளிபவன் அல்ல - மு.க.ஸ்டாலின்
நான் ஓடி ஒளிபவன் அல்ல, எதையும் எதிர்கொள்பவன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் அவர், “தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். திறந்த மனம் கொண்டு குற்றம் செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறேன். துயரம் மிகுந்த இந்த சமயத்தில் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி