+2 பொதுத்தேர்வு - அரசு முக்கிய அறிவிப்பு

56470பார்த்தது
+2 பொதுத்தேர்வு - அரசு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் நாளை (மார்ச் 01) +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வுகள் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடக்க உள்ளது. தேர்வு தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிட வினாத்தாள் படிக்கும் நேரம் வழங்கப்படும். அதனால், தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி