திமுக பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சு

59541பார்த்தது
திமுக பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சு
சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராவமுதன் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராவமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி