தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்

29098பார்த்தது
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி