ஹுண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஹுண்டாய் மோபிஸ் சார்பில், நிர்வாக இயக்குநர் பார்க் கி சுல், மூத்த பொது மேலாளர்கள் கிம் பியுங் கியு, செந்தில் ராஜ்குமார், மனிதவள தலைவர் பிரேம் சாய் ஆகியோர் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் வழங்கினர். அப்போது தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உடனிருந்தார்.