பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது

66பார்த்தது
பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பூவிளம் கிராமத்தைச் சேர்ந்த ராமரின் மனைவி பொன்மலர் அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துக்கொண்டு தப்பிய சூரியா மற்றும் சுகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி