கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டையில் வசிக்கும் சம்மந்தமூர்த்தி என்பவரின் வீட்டு தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள முதலை புகுந்தது. முதலையை பார்த்து அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்மந்தமூர்த்தி வீட்டுக்கு விரைந்து வந்து 550 கிலோ எடை கொண்ட அந்த முதலையை லாவகமாக மீட்டு ஏரியில் விட்டனர்.